செவ்வாய், 5 மே, 2015

அரச இனத்திற்கு அரசாள வாய்ப்பு மறுக்க படுகிறது.

அரச இனத்திற்கு அரசாள வாய்ப்பு மறுக்க படுகிறது.
தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒரு கோடியே நாற்பத்தி ஏழு இலச்சம் (1,47,00,000) யாதவர்கள் உள்ளனர். (இந்தியாவில் 30 கோடிக்கு மேல்).
ஆனால் இங்குள்ள திராவிட அரசியல் கட்சிகள் யாதவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி கொள்கின்றனர். ஒன்றை கோடி யாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
அரச இனத்திற்கு அரசாள வாய்ப்பு மறுக்க படுகிறது.
பல அரசர்களுக்கு கொண்ட இனம் என்றால் அது யாதவ இனமே.
தமிழகத்தில் முதல் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்து கோன் யாதவை கொடுத்தவர்கள் நாங்கள்.
சிதறிக்கிடந்த பாரதத்தை ஒன்று சேர்த்து ஆண்ட பரதனை கொடுத்தவர்கள் நாங்கள். அதனால் தான் பரத நாடு என்று பெயர் பெற்றது.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை கொடுத்தவர்கள் நாங்கள்.
உலகத்தில் தன்னை வெள்ள எவரும் இல்லை என்று மார்தட்டி கொண்டு இந்தியா வந்த அலெக்சாண்டர் போருஸ் என்னும் யாதவ மன்னனால் தோற்கடிக்க பட்டான். இந்த போருஸ் (porus) கொடுத்தவர்கள் நாங்கள்.
இந்தியாவில் இராணுவத்திற்கே பணியாற்றும் மாநிலமான ஹரியானா இதில் சுதந்த்ரதிக்கு போராடிய அரசன் ராவ் துல ராம் யாதவை கொடுத்தவர்கள் நாங்கள்.
ஆந்திர, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளை சேர்த்து ஆண்ட விஜயநகர பேரரசர்கள் யாதவர்கள். இவர்களை கொடுத்தவர்கள் நாங்கள். குறிப்பாக கிருஷ்ணதேவராயர் யாதவ் விஜயநகர யாதவ வம்சத்தின் சிறந்த அரசர் ஆவார்.
இந்த பாரதத்தில் மறக்க முடியாத அரசர் என்றால் அவர் மாவீரர் அசோகர் இப்போதும் அவரது கோட்டை கம்பீரமாக உள்ளது. அந்த நான்கு முக சிங்கத்தை பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத சந்தோசம் நமக்கு ஏற்படும் அந்த யாதவ மன்னனை கொடுத்தவர்கள் நாங்கள்.
வீரம் என்றால் என்குல மன்னன் மாவீரன் சத்திரபதி சிவாஜியை தான் குறிக்கும் அந்த சிவாஜி யாதவை கொடுத்தவர்கள் நாங்கள்.
தேவகிரி என்னும் இடத்தை தலைமை இடமாக வைத்து கர்நாடகா, மகாராஷ்டிரா மத்திய பிரதேஷ் சேர்த்து பல யாதவ மன்னர்கள் 484 (850-1334) ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுள்ளனர். அத்தகைய யாதவ மனர்களை கொடுத்தவர்கள் நாங்கள்.
அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் அரசாள சத்திரிய வம்சத்தில் ஒருவரை தேடி இடை(யாதவ்) வீட்டு பையன் தத்து எடுத்து அரசனாகினார்.
அனைத்திற்கும் மேலாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்தது யாதவ இனத்தில் யது குளத்தில் பிறந்ததால் தான் தனக்கே பெருமை என்றார்.
ஆயிரம் ஆயிரம் ஆயர்கள்(யாதவர்கள்) ஆண்ட பூமி இது.
ஆனால் இன்று தமிழக அரசியலில் யாதவர்கள் நிலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
இத்தனை அரசர்களை கொடுத்த எங்கள் இனத்திற்கு அரசாள தெரியாத?நாங்களே எங்களை ஆச்சி செய்துகொள்வோம்.
நம்மை ஒதுக்கும் அரசை நாம் ஒதுக்குவோம். ஒவ்வரு யாதவரும் அந்த பகுதியில் நிற்கும் யாதவற்கு ஓட்டு செலுத்துங்கள். யாதவர் ஓட்டு யாதவருகே என்பதை இந்த அரசுக்கு புரிய வையுங்கள்.
இந்தியா முழுவதும் யாதவர் ஆளும் காலம் மீண்டும் வரும் அதற்கான போராட்டத்தை உங்களிடம் இருந்து எடுத்து செல்லுங்கள்.
யாவரும் வாழ யாதவரே ஆளனும். வாழ்க பாரதம் வளர்க யாதவம்.
-

'ஜாதி பார்முலா'வுக்கு சிதம்பரம் திடீர் முக்கியத்துவம்:கட்சியினர் மீது பாச மழை; மாற்றியது எது?


'ஜாதி பார்முலா'வுக்கு சிதம்பரம் திடீர் முக்கியத்துவம்:கட்சியினர் மீது பாச மழை; மாற்றியது எது?
Latest indian and world political news information
நக்சல்களின் தொடரும் அட்டகாசத்தால் ப.சிதம்பரத்திற்கு ஒரு பக்கம் தலைவலி இருந்தாலும், உள்ளூர் அரசியலை உன்னிப்பாக கவனிக்க எப்போதும் தவறுவதில்லை. தனது ஆதரவாளர்கள் அழைக்கும் குடும்ப நிகழ்ச்சி, கட்சி விழா, அரசியல் பொதுக்கூட்டங்களில் சிதம்பரம் பங்கேற்று வருகிறார். தன்னால் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில், தனது அரசியல் வாரிசான கார்த்தி சிதம்பரத்தை அனுப்பி விடுகிறார்.இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில், கார்த்தி சிதம்பரத்திற்கு ழுழு சுதந்திரம் அளித்தார். தேர்தல் குறித்து, தனது ஆலோசனைகளை மகனுக்கு வழங்கியதோடு, தன் பங்குக்கு நிர்வாகிகள் தேர்தலில் சில வெற்றிகளையும் பெற்றுத் தந்தார்.
'கட்சியினரிடம் கலந்தாலோசிக்க மாட்டார், என சிதம்பரம் மீது விமர்சனம் எழுந்த காலமும் உண்டு. அந்த விமர்சனத்தை தனது அணுகுமுறை மாற்றத்தினால் தவிடுபொடியாக்கியுள்ளார். தற்போது, தன்னை தேடி வரும் கட்சியினரை தனக்கு சரி சமமாக அமர வைத்து, அவர்களிடம் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கிறார்.சொந்த தொகுதியான சிவகங்கைக்கு சிதம்பரம் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களினால், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனக்கு மிக எளிதாக வெற்றி கிடைக்கும் என சிதம்பரம் கருதினார். ஆனால், தேர்தலில் அவர், 'பகீரத' முயற்சியில் தான் வெற்றி பெற முடிந்தது.இதற்கு காரணம் குறிப்பிட்ட சில ஜாதி ஓட்டுகள் அவரை அமோக வெற்றியை தரவிடாமல் சதி செய்துள்ளது என தெரியவந்தது. இதனால் அனைத்து ஜாதி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவதற்காக, அச்சமுதாய பிரதிநிதிகளுக்கு அரசு பதவிகள் மற்றும் கட்சி பதவிகளில் இடம்பெற வைக்கும் 'ஜாதி பார்முலா' வை சிதம்பரம் கையாண்டு வருகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆரணி, ஆவடி பகுதிகளில் வன்னியர் சமுதாயத்தினரால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் பங்கேற்றார். தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் வகையில், கடந்த 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவிலும் ஜோராக கலந்து கொண்டார். அவ்விழாவில், 2004ம் ஆண்டு தான் நிதி அமைச்சராக இருந்த போது தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக்கூறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதை பட்டியலிட்டார்.யாதவர் சமுதாயத்தின் ஓட்டுக்களை கவருவதற்காக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த வரதராஜனை சிதம்பரம் அணி நிறுத்தி ஆதரித்தது. இந்தியன் வங்கியின் டைரக்டராக பணியாற்றும் யாதவர் சமுதாயத்தை சேர்ந்த சரத்சந்தரின் இல்லத் திருமண விழா, சமீபத்தில் மயிலாடுதுறையில் நடந்தது.
அதில், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 'சுதந்திரம் அடைந்த பின், யாதவர் சமுதாயத்திலிருந்து ஒருவர் கூட எம்.பி.,யாகவில்லை. கடந்த தேர்தலில் யாதவர் சமுதாயத்தை சேர்ந்த அழகிரியை எம்.பி.,யாக்கி டில்லிக்கு அனுப்பிய பெருமை சிதம்பரத்திற்கு உண்டு. நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த வானமாமலைக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இயக்குனர் பதவி வாங்கி கொடுத்தார்' என்றார்.
சிதம்பரம் பேசும்போது, 'யாதவர் சமுதாயம் பெரிய சமுதாயம். அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக யாதவப் பெண்கள் நன்றாக படிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்' என்றார்.ஆக, மொத்தத்தில் ஜாதி ரீதியாக அனைத்து சமுதாயத்தினரையும் கவரும் வகையில் சிதம்பரத்தின் அரசியல் பயணம் தொடர்கிறது. இந்தப் பயணம், அவரது தொலை நோக்குத் திட்டத்திற்கு வெற்றியை தேடித் தருமா என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

யாதவ மகா சபை

யாதவ மகாசபை

யாதவ மகாசபை என்பது உலக அளவில் தமிழ் பேசும் யாதவர்களின்(கோனார) சமுதாய அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பின் தலைவராக திரு.தி தேவநாதன் யாதவ் உள்ளார்.இந்த அமைப்பின் முதல் மாநாடு நெல்லையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை திறப்புடன் தொடங்கியது.
                 நெல்லையில் திறக்கப்பட்ட வீரன் அழகுமுத்து கோன் சிலை









இந்த அமைப்பின் இரண்டாவது மாநாடு சென்னையில் 30-01-2011 அன்று
  யாதவர் வாழ்வுரிமை மீட்பு என்ற பெயரில் நடைபெற்றது.
யாதவ மகாசபையில் பிரதான கோரிக்கைகளாக அரசியல் அதிகாரம் யாதவர்களுக்கு மிகவும் பிற்படுத்த பட்டியலில் இடம்(MBC)இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன் நின்று நடத்தி வருகிறது
இந்த மாநாட்டில் உலக முழுவதும் இருந்து பல லட்சம் யாதவர்கள் சொந்தங்கள் கலந்து கொண்டார்கள்

ராஜ கண்ணப்பன்

R.S ராஜகண்ணப்பன்

திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள் அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கட்டலாங்குலத்தில் வீரன் அழகுமுத்துகோன் சிலை அரசு சார்பில் அமைக்கப்பட்டும் மேலும் வீரன் அழகுமுத்து கோன் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும்இவரது முயற்ச்சியால் இந்த காலத்தில் அழகுமுத்து கோனார் பெயரில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கியது(veeran Azagumthu kone transport corparation)
பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி தமிழ்நாடு யாதவ மகாசபை ஆதரவுடன் மக்கள் தமிழ் தேசம் கட்சி
என்ற அரசியல் கட்சி தொடங்கினார் இந்த கட்சிக்கு யாதவ மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

யாதவர் வரலாறு

கோனார்(யாதவர் )

கோனார் என்போர் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சமுதாயம் ஆகும்,இவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த சத்திரியர்கள் ஆவர், யாதவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம்செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் கோனார்,யாதவர்,கரையாளர் மற்றும் இடையர் என்றழைக்கபடுக்கிறார்கள்

 வடஇந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் தொடர்பு உண்டு.இவர்கள் ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கறந்து விற்பதுமே இவர்களின் தொழிலாக இருக்கிறது.
 தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி. இவர்கள் பால் மற்றும் பால்பண்ணை சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

வழிபாடு

கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர்.

பெயர்காரணம்

`இடை' (நடு) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து `இடையர்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் `முல்லை' என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.

விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே நடுவே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இடையர்கள்தான் பிற்காலத்தில் தங்கள் பெயர்களுடன் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்துக்கொண்டுள்ளனர். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் `பிள்ளை, கரையாளர்' என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.

பாரம்பரியம்

இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆயர் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள்.
அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழகத்தில் பதிப்புத்துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்ட இ.மா.கோபால கிருஷ்ணக்கோனார், ஆ.கார்மேகக் கோனார், பொன்னையக் கோனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆயர்குல வீரம்: ஆயர் விளையாட்டு
மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளை களைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள்(ஜல்லிக்கட்டு )  என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் க ட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும். களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.

சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்:

சங்க இலக்கியமான கலித்தொகை:

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை(ஆயர்) மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது

மாவீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

மாவீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும்.
அழகுமுத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது. ``மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ``தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, யாதவ சமூகம் பெருமை தேடிக் கொண்டது.
 
தமிழ்நாட்டின் மிகப் பழைமை வாய்ந்த சமூகங்களுள் ஒன்று யாதவர் சமூகம். இவர்கள் இடையர்கள், ஆயர்கள், கோனார் என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றனர். வடஇந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கறந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி.
`இடை' (நடு) என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து `இடையர்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் `முல்லை' என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.

விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே நடுவே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது என்று பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இடையர்கள்தான் பிற்காலத்தில் தங்கள் பெயர்களுடன் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்துக்கொண்டுள்ளனர். 1891ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் `பிள்ளை, கரையாளர்' என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர்

இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு.


மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிவந்த தகவல்

மாவீரன் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாறு உலகறிய பல்வேறு தரப்பினர் உதவி இருக்கின்றார்கள். அதைப்பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1959ஆம் ஆண்டு பந்துலு இயக்கிய வீபாண்டிய கட்டபொம்மன் என்கிற திரைப்படம் வெளிவந்தது. அப்போது இந்த திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்த பாத்திரமான எட்டப்பன் பிறந்த கிராமமான எட்டயபுரம் பற்றி மிகவும் இழிவாக காட்டப்பட்டது. இதை கண்டு மனம் வருந்திய எட்டயபுரம் அரசன் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து எட்டயபுரம் சமஸ்தானம் அந்த படத்தில் மிகவும் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாகவும் அதை சீர் செய்யும் வகையில் தமிழறிஞர் அனைவரும் அந்த களங்கத்தை நீக்க உதவுமாறு கோரினார். இதனையடுத்து தமிழறிஞர்கள் எட்டயபுரம் சமஸ்தான புத்தக சாலையை படித்து ஆராய தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கோரினர். இதை ஏற்ற அரசர், புத்தக சாலையை ஆராய அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் சாமி தீட்சிதர் என்பவர் 1878ஆம் ஆண்டு எழுதி வம்சிமணி தீபிகை என்கிற புத்தகமும் டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and present என்கிற புக்கங்களில் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற அரசனுக்கு மாவீரன் அழகுமுத்துக்கோன் தளபதியாக இருந்ததாகவும் அழகுமுத்துக்கோன் இல்லை என்றால் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் இல்லை என்று அந்த புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் நடந்த கால கட்டம் 1750என்று கருதப்படுகிறது. இந்த குறிப்புகள் பின்னர் தினமனி நாளிதழில் கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்ற பகுதியில் வெளி வந்தது. இதேபோல்,1976 ஆம் ஆண்டு எட்டயபுரம் வரலாறு என்கிற புத்தகத்தில் 65 பக்கம் வீரன் அழகுமுத்துக்கோன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை யாதவா கல்லூரி பேராசிரியர் ‎ஷாஜகான் கனி எட்டயபுரம் அரண்மனைக்கு சென்றிருந்தபோது, அங்கு குழந்தைகளுக்கு ஆங்கில பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், கட்டாலங்குளம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அதை கேட்ட பேராசிரியர், வீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பிடமான கட்டாலங்குளம் பற்றி விசாரித்தார். அப்போது, இந்த ஆசிரியர் இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வம்சம் இருப்பதாகவும் அவர் வாரிசாக திரு.சிவத்தசாமி என்பவர் அங்கு வசித்து வருவதாகவும் கூறினார். இத்தகைவலை அறிந்த பேராசிரியர் உடனே கட்டாலங்குளம் சென்று திரு. சிவத்தசாமியை சந்தித்து அழகுமுத்துக்கோன் வரலாறை அறிந்து கொண்டார்.

இச்சமயத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் புகழ் பல இடங்களில் பரவத் தொடங்கியது. இந்நிலையில், பல ஜாதியினர் அவரை சொந்தம் கொண்டாட தொடங்கினர். மாவீரன் அழகுமுத்துக்கோன் பெயரில், சில இடங்களில் சேர்வைக்காரன் என்கிற அடைமொழி குறிப்பிடப்படுவதால் அவர் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்று ஓர் இனத்தவர் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். வேர்வைக்காரன் என்பது ஜாதி பெயர் இல்லை என்றும் சேர்வைக்கான என்ற பெயர் ஜாதி பட்டியலில் குறிப்பிடப்படவில்லை.சேர்வைக்காரன் என்பது ஒரு பட்டம். திறமையான படைத் தளபதிகளுக்கு கொடுக்கப்படுவது சேர்வை என்கிற பட்டம் என்று வரலாற்று பேராசிரியர் தேவஆசிர்வாதம் ஓர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். படையில், சேர்மானம்மான திட்டம் வகுப்பவன் சேர்வைக்காரன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேர்வைக்காரன் பட்டம் பெற போட்டிகள் உள்ளன. அவற்றில் வாள்வீச்சு, காளை அடக்குதல் ,மல்யுத்தம் போன்ற பல போட்டிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்றால்தான் சேர்வைக்காரன் என்ற பட்டம் வழங்கப்படும். இதுபோல் பல போட்டிகளில் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் வெற்றி பெற்று திருமலைநாயக்கர் அரசரிடம் சேர்வை என்கிற பட்டம் பெற்றார்.
அதேபோல், மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது. இதுவே அவர் யாதவ குலத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்று குறிப்பிடலாம். ஏனெனறால், ஐயங்கார்கள், மாதுவர்கள், நாயுடுகள், யாதவர்கள் மட்டுமே தங்கள் பெயரிலும் கோத்தரத்திலும் வைணவ சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பார்கள். ஆகையால், மாவீரன் அழகுமுத்துக்கோன், யாதவர் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை